பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறும் 108 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்துதலுக்கு தயாராகிறது பிரிட்டிஷ் கொலம்பியா. சுகாதாரத்துறை அலுவலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தற்போது 1,496 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், 143,299 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாகாணத்தில் 1,734 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், புதிதாக ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை.
இரண்டாவது கட்ட கட்டுப்பாடுகள் நெகிழ்த்தலைப் பொருத்தவரை, சினிமா தியேட்டர் முதலான கட்டிடங்களுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை அனுமதிக்கப்படுதல், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் நள்ளிரவு வரை மதுபானம் விநியோகிக்க அனுமதி ஆகிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.