கிழக்கு லண்டனில் 5 வயது சிறுவன் ஒருவன் பள்ளியிலிருந்து தனது குடும்பத்தாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது , சிறுவனை பின்தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவர் திடீரென அந்த சிறுவனை வேகமாக பிடித்து இழுத்துள்ளார்.
எனினும் இந்த சம்பவத்தில் சிறுவன் தப்பித்த நிலையில் சந்தேகநபர் அந்த இடத்திலிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன சிறுவனின் குடும்பத்தார் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி புகைப்படத்தை கொண்டு பொலிஸார் அந்த இளைஞனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த இளைஞனுடைய புகைப்படத்தை வெளியிட்டு அவனுக்கு 30 அல்லது 20 வயது இருக்கும் சந்தேகநபர் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிய வந்தால் உடனடியாக தகவல் வழங்குமாரும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.