தமிழகத்தில் 6ம் வகுப்பு மாணவியை கடத்தில் 17 வயது சிறுவன் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படித்து வந்த 11 சிறுமியின் தந்தை அதே பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார்.
ஊரடங்கினால் வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்த அந்த சிறுமியை, மின் கட்டணம் செலுத்த சென்ற தாய் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
மின்கட்டணம் செலுத்திவிட்டு திரும்பி வரும்போது, தாய் தனது மகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கோழிக்கடைக்கு சென்றுள்ளார்.
பின்பு வீட்டிற்கு வந்த தாய், தன்னுடய மகள் வீட்டில் இல்லாதததைக் கண்டு பல இடங்களில் தேடியதோடு, கணவருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இருவரும் பல இடங்களில் தேடி மகள் கிடைக்காததால் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொலிசாரும் விசாரித்து வந்த நிலையில், பொதுமக்களும் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது சிறுமியின் வீட்டு அருகே உள்ள புதர்க்காட்டில் உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த பொலிசார், செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது 17 வயது ஐஐடி மாணவர் ஒருவர் சிக்கியுள்ளார்.
தனக்கும் சிறுமியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய இளைஞர், ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இளைஞர் அளித்த வாக்குமூலத்தில், தனியாக வந்த சிறுமியை பேச்சுக்கொடுத்து புதர் பக்கம் அழைத்து வந்து, மகிழ்ச்சியாக இருக்க நினைத்தாகவும், அதற்கு சிறுமி சம்மதிக்காததால் தலையில் கல்லால் அடித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தலையில் பலமாக அடிபட்ட சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் கொடூர சிறுவன், சிறுமியின் உடலில் பல இடங்களில் கடித்து வைத்ததும் அம்பலமாகியுள்ளது. அதுமட்டுமின்றி உயிர் பிழைத்தால் தன்னை காட்டிக்கொடுத்து விடுவார் என்று அடித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பெற்றோர் இல்லாததால், உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த சிறுவன், கஞ்சாவுக்கும், ஆபாச படங்களுக்கும் அடிமையாகி இவ்வாறான கொடூர செயலை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.