ரகுமான் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர். இவருக்கு என்று உலகம் முழுவதுமே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில், ரகுமான் குறித்து மிக தரக்குறைவாக பேசியுள்ளார்.
அதில் ‘ரகுமான் என்ன பெரிய ஆளா, ஆஸ்கர் வாங்கிட்டா பெரிய ஆளா, பத்து வருடத்துக்கு ஒரு பாட்டு ஹிட்டு கொடுப்பவர் தான் ரகுமான்.
பெரிய பெரிய விருதெல்லாம் என் காலுக்கு சமம்’ என்று தரக்குறைவாக மட்டுமின்றி ஒருமையிலும் பாலகிருஷ்ணா பேசியுள்ளார். இவை ஒட்டு மொத்த இசை ரசிகர்களுக்கும் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.



















