தற்போதைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கு காரணமாக முதலிடத்திலிருந்த தடுப்பூசியேற்றல் பணிகள் இன்று வீழ்ச்சி நிலையை அடைந்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு இன்று படுமோசமான நிலையை சந்தித்திருப்பதாகவும் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்று ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் அதனால் வீழ்ந்துள்ளது. தடுப்பூசி அளிப்பதில் இலங்கை முதலிடத்தை வகித்து வந்தது.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற ஆட்சியினால் தடுப்பூசியளிப்பதிலும் நாங்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றோம் என கூறியுள்ளார்.



















