கண்டி, எசல பெரஹெரவில் பங்கேற்ற நடனக் குழுவில் பங்கேற்ற 45 பேருக்கு கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரந்தோலி பெரஹெரவில் பங்கேற்ற நடனக் குழுவில் 76 கலைஞர்களுக்கு விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியான முடிவுகளே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை எசல பெரஹெர விழாவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்றையதினம் வீதி உலா வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




















