நாட்டில் தற்போதுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து நிபுணர்களின் சார்பாகவும் பேசுவதாகவும் மருத்துவர் அபேசிங்க குறிப்பிட்டார். அத்துடன் வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி மட்டும் தெரிவாகாது என அவர் கூறினார்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க அதிகாரிகள் முயன்றதனால் தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நாங்கள் தவறவிட்டோம் என்றும், அப்படித்தான் அந்த இறப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.



















