நாட்டிலுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது அவசியன் என பிரசவ நரம்பியல் விசேட வைத்தியர் அஜித் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதோடு கர்ப்பவதிகள் கொரோனா தொற்றுக்குள்ளானால் பெரும் சிக்கல் எனவும் கூறியுள்ளார்.
இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வயிற்றிலிருக்கும் தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை பால் ஊட்டும் தாய்மார் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் கூடுதலான பாதுகாப்பு கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



















