மட்டக்களப்பு – முகத்துவாரப் பகுதியில் ஊரடங்கு வேளையில் சட்டவிரோதமாகப் பெருமளவிலான அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு தண்டப்பணமாக 65 ஆயிரம் ரூபா செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம் றிஸ்வான் முன்னிலையில் இன்று (25) குறித்த நபரை ஆஜர்படுத்தியபோது நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸ்சாஜன் ரி. கிருபாகரன் தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று முகத்துவாரம் பகுதியிலுள்ள குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது நீண்டகாலமாகச் சட்டவிரோதமாக அரச மதுபானங்களை வியாபாரம் செய்து வந்த ஒருவரை பெருமளவிலான மதுபானப் போத்தல்களுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை தண்டப்பணமாக 65 ஆயிரம் ரூபா செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.