கோவிட் ஒழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து நிபுணத்துவ மருத்துவர் ஒருவர் விலகியுள்ளார்.
தேசிய கோவிட் ஒழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து அதில் அங்கம் வகித்த நிபுணத்துவ மருத்துவர் ஒருவர் விலகியுள்ளார். தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரமவே இவ்வாறு கோவிட் ஒழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.
சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தமது ராஜினாமா பற்றி டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம அறிவித்துள்ளார்.
இந்த குழுவின் ஒரு சில தீர்மானங்களுடன் தமக்கு உடன்பாடு கிடையாது எனவும் தொடர்ந்தும் குழுவில் அங்கம் வகிக்க முடியாது எனவும் அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.