யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கானை தேவாலய வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று பகல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயிருந்தார். பல இடங்களிலும் தேடிய பெற்றோர், சிறுவனை காணாத நிலையில் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதேவேளை, நேற்று பின்னிரவில் சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சற்று அப்பாலான பகுதியில், குடிநீர் விநியோக திட்டத்திற்காக குழாய் பொருத்த தோண்டப்பட்ட கிடங்கில் வெள்ளம் தேங்கியியுள்ள நிலையில், சிறுவனின் சடலம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பார்த்தீபன் ஸ் ரீபன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.