• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அறிவியல்

புற ஊதாக்கதிர்கள் பூமியை வந்தடைவதால் ஏற்ப்படும் விளைவுகள்

Editor1 by Editor1
October 27, 2021
in அறிவியல்
0
புற ஊதாக்கதிர்கள் பூமியை வந்தடைவதால் ஏற்ப்படும் விளைவுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோன் படலத்தைப் பாதுகாக்க ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் திகதியை ஓசோன் தினமாக

கொண்டாடுகிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் வாயுப் படலமாகும். இது ஒக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும் (O3).

அதாவது மூன்று ஒக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனை சி.எப்.ஸ்கோன்பின் என்பவர் கண்டறிந்தார். ஓசோனானது பூமிக்கு மேலே வாயு மண்டலத்தில் 10-50 கிமீ தொலைவில் காணப்படுகிறது.

ஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியைக் கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம். ஓசோனின் முக்கிய பணி சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து, பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பதுதான். ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1 சதவீதம் குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டி.என்.ஏயை நேரடியாகப் பாதிக்கும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஓசோன் துளை என்பது வளிமண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில், இங்கு ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை ஆகும். உண்மையில் இது துளை இல்லை. இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும், சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும் போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பு இல்லை. ஆனால் மனித செயல்பாட்டால் அதிக அளவில் ஓசோன் சிதைக்கப்படுவதால் துளை ஏற்படுகிறது. 1980ம் ஆண்டில் அண்டார்டிக்காவில் மிகப் பெரிய ஓசோன் இழப்பு (துளை) கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ‘குளோரோ புளூரோ கார்பன்’ ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டன. ஓசோன் இழப்பால் அதிகமான புறஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால் மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு, நோய்த்தடை காப்பு மண்டலம் செயலிழப்பு, எரித்திமா போன்ற பாதிப்புகள் ஏற்படும். இறுதியாக மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும். புவியில் உள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவைச் சந்தித்து விடும். நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும்.

நாம் அதிகம் பயன்படுத்தும் குளிர்சாதனங்களான ‘ப்ரிட்ஜ்’ மற்றும் ‘ஏ.சி’ சாதனங்களில் நிரப்பப்படும் வாயுக்களே ஓசோன் பாதிப்புக்கு பெருமளவு காரணம். இதுபோன்ற வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், புதிய பொருள்களைக் கண்டுபிடித்தால், அதை ஊக்கப்படுத்துவதை வலியுறுத்தியும் கடந்த 1987ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் இணைந்து கையொப்பமிட்ட மான்ட்ரீல் சாசனம், செப்டம்பர் 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்நாளை 1994 இல் சர்வதேச ஓசோன் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுத்து கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவ்வாறு குறைந்தால் புவியில் உயிரின இருப்புக்கு ஆபத்து ஆகும்.

பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளிமண்டலப் பகுதியில் உள்ள ஒக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு இரசாயனத் தாக்கம் புரிவதால் ஒக்சிஜன் அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஒக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது.

இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை. இத்தகைய கதிர்களை பூமிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஓசோன் நடலத்தின் பணி.

இரசாயனப் பசளைகளில் பயன்படுத்தப்படும் மெதைல் புரோமைட், ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஒக்சைட் போன்றவையும் ஓசோன் படலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளியேறும் குளோரோ புளோரோ கார்பன், வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காபனீரொட்சைட், நைட்ரஸ் ஒக்சைட் போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.

ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்ததால் பூமியில் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். தற்போது ஓசோன் படலம் பாதிக்கப்படுவது ஓரளவு தடுக்கப்பட்டு விட்டாலும் கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை

Previous Post

இந்தியாவில் மாற்றம் பெற்ற டெல்டா

Next Post

முதுமைத் தாக்கங்களை போக்கி மகிழ்வுடன் வாழ்வது எப்படி

Editor1

Editor1

Related Posts

துருப்பிடித்து வரும் நிலவு!
அறிவியல்

துருப்பிடித்து வரும் நிலவு!

September 29, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!
அறிவியல்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!

September 28, 2025
10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
அறிவியல்

10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

September 27, 2025
மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க
அறிவியல்

மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க

September 26, 2025
பூமியில் இருந்து நகரும் சந்திரன்!
அறிவியல்

பூமியில் இருந்து நகரும் சந்திரன்!

September 22, 2025
இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!
அறிவியல்

இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!

September 22, 2025
Next Post
முதுமைத் தாக்கங்களை போக்கி மகிழ்வுடன் வாழ்வது எப்படி

முதுமைத் தாக்கங்களை போக்கி மகிழ்வுடன் வாழ்வது எப்படி

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025

Recent News

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy