எவ்வாறு யுத்தத்தை வென்றாரோ அவ்வாறு பொருளாதாரத்தையும் ஜனாதிபதி வெல்லுவார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda)தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர். அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன் என கூறியுள்ளார்.



















