இலங்கையில் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கும், வெளியே செல்வதற்கும் கோவிட் தடுப்பூசி அட்டை அவசியம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர், கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.


















