ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றில் பிரதமரின் இளைய மகனான ரோஹித ராஜபக்சவும் (Rohitha Rajapaksa) பங்குபற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
களுத்துறை மாநகர விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி வெலிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய,இன்றைய தினம் சில போட்டிகள் நடைபெற்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது,களுத்துறை மாநகர விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் இளைய மகனான ரோஹித ராஜபக்ச பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



















