இலங்கை இராணுவத்தின் 59வது பிரதானியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம்.லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் 58 வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய பிரதானி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.