இலங்கை மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி செப்டம்பர் மாதம் வாழைச்சேனையில் இருந்து கடலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அமைச்சரை டக்ளஸ் அவர்களின் கடும் முயற்சியின் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்ட நால்வரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
குறித்த நான்கு மீனவர்களையும் அவர்களது படகையும் நாட்டிற்கு கொண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.