எதிர்வரும் 18ம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 09,10,11,12,13, மற்றும் 14 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.