இலங்கையின் பொருளாதாரம் ராஜபக்ச அரசால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சீனாவிடம் இருந்து கடன்பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தபோது, கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று கடன் கோரியுள்ள நிலையில், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தாரைவார்க்கப்படுகின்றன.
அரசின் உண்மை நிலை தொடர்பான விபரங்களை வெளியிடுவோர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இவ்வாறு முறையற்ற நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது என தெரிவித்துள்ளார்.