நாட்டின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக நான்கு மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஹங்கேரியின் எக்சிம் வங்கி ஊடாக நிவாரண அடிப்படையில் நிதியை பெறும் உடன்படிக்கையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், முத்தெட்டுகல ரயில் கடமை மற்றும் ஹரிப்பிட்டிய சந்தியை இணைக்கும் வகையில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதனை தவிர பஸ்யாலை சந்தி, நீர்கொழும்பு மாரிஸ்டெலா சந்தி, தலவத்துகொடை சந்தி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதேவளை ஹங்கேரியின் நிவாரண நிதியுதவியின் கீழ் கொஹூவலை மற்றும் கெட்டம்பே மேம்பாலங்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.