அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் கொரோனா திருபு சம்பவங்களால் எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டங்களை
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலம் ரத்து செய்துள்ளது.
முன்னதாக அடுத்த மாதம் 5ஆம் திகதியிலிருந்து எல்லைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவுவதால் எல்லைகளைத் திறப்பது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்று மாநில முதல்வர் கூறினார்.
எல்லையைத் திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி அல்லது கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 80 வீதத்தை எட்டும் வரை ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அது 26 வீதமாக உள்ளது.
அவுஸ்திரேலிய நோய்வாய்ப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியது.