அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கோவிட், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவலைத் தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது. யாழ் மாவட்டத்தில் இதுவரை 19,062 பேர் கோவிட் தொற்றாளர்களாகவும் 502 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.


















