இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிராக விளையாடி வரும் மேற்கிந்தியத் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில், முதல் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி பங்கேற்கும் 1000-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டனுமான ரோஹித் சர்மா 51 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷன் 36 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார்.
விராட் கோலி 8 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். ரிஷப் பன்ட் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் – தீபக் ஹூடா இணை வலுவான களத்தில் நின்றது. சூர்யகுமார் ஆட்டமிழக்காமல் 34 ரன்களையும், தீபக் ஆட்டமிழக்காமல் 26 ரன்களையும் சேர்த்தனர்.
இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் கோலி 4 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால், சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 5 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி நேற்று படைத்தார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் தனது 249வது இன்னிங்ஸை கோலி விளையாடினார். சொந்த மண்ணில் அவருக்கு இது 96வது இன்னிங்ஸ். இதில் 5000 ரன்களை கடந்ததன் மூலம் சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.