வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால் இன்று (30) பாடசாலையில் ஆசிரியர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
எரிவாயு தேவையான ஆசிரியர்களின் விபரங்கள் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்டு, லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம் விடப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையிலேயே எரிவாயு விநியோகிக்கப்பட்டிருந்தது.



















