யாழ். – வட்டுகோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடவிருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன். குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளனர்.



















