நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா தான் கொரோனா லாஃடவுன் காலகட்டத்தில் பணம் சுத்தமாக இல்லாமல் கஷ்டப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
சரிகா
நடிகர் கமலை திருமணம் செய்துகொண்டு ஐந்து ஆறு வருடங்கள் வாழ்ந்தவர் நடிகை சரிகா. அதன் பின் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு பிறந்த மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் தற்போது சினிமாவில் நடிகைகளாக வலம் வருகின்றனர்.
பணம் இல்லை
இந்நிலையில் சரிகா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் தான் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் பணம் இல்லாமல் அதிகம் கஷ்டப்பட்டதாக கூறி இருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதை நிறுத்தி மேடை நாடங்களில் நடித்தேன். ஒரு வருடம் மட்டுமே இப்படி ஒரு பிரேக் எடுத்தேன். ஆனால் கொரோனா லாஃடவுன் காரணமாக அது 5 ஆண்டுகளாக மாறிவிட்டது.
“நாடகங்களில் நடித்தால் எனக்கு 2000 முதல் 2700 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும். அதனால் ஒருகட்டத்தில் பணம் சுத்தமாக காலி ஆகி விட்டது. பணம் இல்லாமல் தவித்தேன்” என அவர் கூறி இருக்கிறார்.




















