யாழிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்று கொள்கின்றனர்.
அந்தவகையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். இதனால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்தினை ஓரளவு சீர்செய்தனர்.
கடந்த சில தினங்களாக எரிபொருள் இல்லாமல் இருந்தமையால் மக்கள் இவ்வாறு குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.