தம்மிக்க பெரேரா
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து வெற்றிடமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முன்னிலை வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஏற்கத் தீர்மானித்துள்ளார்.
இந்தநிலையில், தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக தனது அனைத்து நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர் பதவிகளில் இருந்தும் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆணைக்குழுவுக்கு தம்மிக்கவின் பெயர்
இதனையடுத்து,வெற்றிடமாகவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிரப்புவதற்காக தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை கட்சியின் பொதுச் செயலாளரிடம் தம்மிக்க பெரேரா பெற்றுக்கொண்டார்.
தம்மிக்க பெரேரா முதலீட்டு துறை தொடர்பான அமைச்சுப் பதவியை ஏற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.