எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று காலை இணையவழியாக நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த மாத முதல் வாரத்தில் ஆரம்பமாகும் பதிவுகள்
அந்த பதிவில் வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவுகள், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பமாகும்.
சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் வழங்கப்படும்.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட பிரிவுகளின் கீழ் மேலதிக எரிபொருள் ஒதுக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.