பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இந்த சீசனில் மிகவும் வித்தியாசமான முறையில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது அனைவருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் ஜோடிகள்
பிரபல ரிவியில் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பிரபலங்களை நடனம் ஆட வைத்து நடத்தப்படும் ஷோ பிக்பாஸ் ஜோடிகள். இந்த ஷோவில் போட்டியாளராக வருபவர்கள் ஜோடிகளாக பிரிந்து நடனம் ஆட வேண்டும்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இன்று இறுதிப் போட்டி ஒளிபரப்பானதுடன் வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் ஜோடியின் வின்னர் யார்?
இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது அமீர் – பாவனி ஜோடியா, இல்லை சுஜா – சிவகுமார் ஜோடியா என்கிற நிலை வந்தது. நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதிஷ் இருவரும் பிக் பாஸ் ஸ்டைலில் கையை தூக்கி வெற்றியாளரை அறிவிப்பதாக சொன்னார்கள்.
இறுதியில் இருவருமே கையை தூக்கி இரண்டு ஜோடிகளுமே டைட்டில் வின்னர் என அறிவித்தனர். அதனால் அமீர் – பாவனி மற்றும் சுஜா – சுஜா இரண்டு ஜோடிகளுக்குமே வின்னர் என கேடயம் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது. அதை இரண்டாக பிரித்து ஒரு ஜோடிக்கு 2.5 லட்சம் ருபாய் கிடைக்கும்.




















