ஆண், பெண் இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் முக குழிகள்.
முகத்தில் உள்ள இந்த குழிகள் முக அழகை கெடுப்பதோடு பல்வேறு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடும்.
அதற்காக கவலைப்பட வேண்டாம், இதனை எமது வீட்டிலுள்ள சில பொருட்களைக் கொண்டு 3 நாட்களில் சரிசெய்யலாம்.
இந்த பேஸ்டை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தக்காளி பழச்சாறு – 4 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
முல்தானிமெட்டி 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 1/2 ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தக்காளி பழச்சாறு, ரோஸ் வாட்டர் இவை 2 பொருட்களையும் போட்டு நன்றாக கலந்துக் கொள்ளவேண்டும்.
அடுத்தபடியாக இன்னுமொரு சிறிய கிண்ணத்தில் முல்தானிமெட்டி, அரிசி மாவு, கற்றாழை ஜெல், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவேண்டும். தற்போது நமக்கு தேவையான 2ம் தயாராகி விட்டது.
செய்முறை
முதலில் கலந்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை நம்முடைய முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஓபன் போர்ஸ்க்கு உள்ளே இந்த சாறு நன்றாக படுவது போன்று தடவிக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து, இரண்டாவதாக தயாரித்த பேக்கை, பேஸ்ட்டுடன் சேர்த்து முகத்தில் நன்றாக படும் வகையில் எல்லா இடங்களிலும் அப்ளை செய்யவேண்டும். குறிப்பாக முகத்தில் இருக்கக்கூடிய குழிகளில் படுவது போன்று தடவிக்கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யவேண்டும்.
தொடர்ந்து செய்வோமானால் மூன்று நாட்களில் நம்ப முடியாத அளவிற்கு நல்ல தீர்வு நிச்சயம் கிடைக்கும்.