கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தார்.
அதன்படி குறித்த பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அந்தப் பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு படுபயங்கரமான காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து சசிகரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய காணொளி காட்சி நேற்று நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
The police interrogation video has been shown at the trial for a #Scarborough man accused of murdering his estranged wife with a machete in 2019 @TPSHomicide @TorontoPolice #VAWG #femicide https://t.co/HBmZMIlPrk
— Catherine McDonald (@cmcdonaldglobal) November 23, 2022