யாழ்.தென்மராட்சி – வரணி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
வரணி – குடமியன்குளத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த 37 வயதான நபர் ஒருவரே நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.
இந் நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் காணாமல்போனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
மேலும் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.