நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு தற்போதைய தலைமை அதிகாரியும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான திருமதி குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் திருமதி குஷானி ரோஹணதீர 2023 மே 23 முதல் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



















