இலங்கையில் குடும்ப வன்முறை செயல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்
2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறை செயல் தடுப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2018.03.06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குடும்ப வன்முறை செயல் தடுப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.



















