மாத்தளை – ரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரத்தோட்ட கிராமப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரத்தில் இளநீரை பறிக்க முற்பட்ட பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் இளநீர் பறிக்கச் சென்ற போது, மற்றுமொரு மாணவன் கொடுத்த மூங்கில் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கம்மடுவ – களுகல்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



















