பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த மயில் இறகு இந்து மதத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இது கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது என்ற நம்பிக்கை உண்டு.
அந்த வகையில் கோயில்களில் பல முறை மயில்தோகையை பார்த்திருப்பீர்கள். இதை வீட்டில் வைப்பதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.
மயில் இறகில் கருப்பு நூலை கட்டி உங்கள் பர்ஸ்லோ அல்லது பணப்பையில் வைத்தாலோ உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைப்பதுடன் நஷ்டத்திலிருந்தும், கடன் பிரச்சனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.
உங்களுக்கு பயங்கரமான கனவுகள் வந்தாலோ, அடிக்கடி கனவுகளால் பிரச்சனைகளை சந்தித்து வந்தாலோ இரவில் தூங்குவதற்கு முன்பு தலையணை அடியில் மயிலறகை வைப்பது நல்ல பலனை கொடுக்கும்.
வீடுகளில் உள்ள பூஜை அறையை, சாமி புகைப்படம், சிலையை சுத்தம் செய்ய எப்போதும் மயில் இறகை பயன்படுத்துவதே சிறந்ததாகும். இதன் மூலம் உங்களுக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைப்பதுடன் கடன் பிரச்சனையும் குறையும்.
நீங்கள் திருமணமானவராக இருந்தால் கண்டிப்பாக தலையணை அடியில் மயிலறகு வைப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.