அனுராதபுரம் ஹபரணை, பலுகஸ்வாவ பிரதேசத்தில் கணவன் மனைவியை தடியால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு
குறித்த சம்பவமானது நேற்று (26) இடம்பெற்றுள்ளதுடன் எப்பாவல, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்காகி ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக விசாணையில் தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



















