அவிசாவளை வித்தியாலயம் மாவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நண்பர்கள் தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் சூரியகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் வேலை வாய்ப்பு காரணமாக இரண்டு மாத காலமாக குறித்த விடுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த இளைஞனுக்கும் விடுதியில் தங்கியிருந்த ஏனைய நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தாகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.