கோடை காலம் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில், சளி, நீரிழப்பு, சோர்வு, தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சில உணவுகள் கோடை காலத்தில் நோய்க்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறத. எனவே, இந்த கோடையில் ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் எவ்வாறான உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என இங்கு பார்ப்போம்.
உப்பு
கோடை காலத்தில் அதிக உப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், உடலில் வீக்கம் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கோடை காலத்தில் உப்பு உட்கொள்வதைக் குறைப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
தேநீர், காபியை குறைக்க வேண்டும்
தேநீர் மற்றும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோடையில் அவற்றை அதிகமாக உட்கொள்வதால் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவற்றின் வெப்பமான தன்மை காரணமாக, உடல் வெப்பநிலை அதிகரித்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக எலுமிச்சை சாறு மற்றும் மோர் போன்ற குளிர் பானங்களை உட்கொள்வது நல்லது.
ஊறுகாயை தவிர்க்கலாம்
கோடையில் ஊறுகாய் சாப்பிடுவது உடலில் நீர் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அஜீரணம் மற்றும் புண்கள் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.
மிளகாயை தவிர்க்கலாம்
மிளகாய் அதிகமாக சாப்பிடுவது உடலில் பித்தத்தை அதிகரித்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு அதிக வியர்வை மற்றும் உங்கள் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். எனவே, கோடையில் காரமான உணவுகளைக் குறைப்பது நல்லது.
வறுத்த உணவுகளை தவிர்க்கலாம்
சமோசா, பர்கர், பீட்சா போன்ற உணவுகள் கோடையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை செரிமான பிரச்சனைகள் மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும்.