கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு எட்டு மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பாக விசாரனைகளுக்க கார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.