ஈதுல் பித்ர் என்பது மத எல்லைகளைக் கடந்து, ஒற்றுமை, இரக்கம் மற்றும் தன்னலமற்ற தன்மையை ஊக்குவிக்கும் ஒரு கொண்டாட்டம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இலங்கை பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாகும்போது, சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இஸ்லாத்தின் போதனைகள் ஒரு சிறந்த முன்மாதிரியை வழங்குகின்றன
மேலும், ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் பொறுப்புக்கூறலை மதிக்கும் ஒரு பொறுப்பான மற்றும் நெறிமுறை அரசியல் கலாசாரத்தை வளர்க்க நாடு பாடுபடுகையில், ரமழானில் வலியுறுத்தப்படும் சுயக்கட்டுப்பாடு மற்றும் தியாகத்தின் கொள்கைகள் ஒரு ஊக்கமளிக்கும் மாதிரியை வழங்குகின்றன என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
மக்களின் விருப்பங்களையும் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு நிர்வாக முறையை வளர்ப்பதன் அவசியத்தை அவை நமக்கு நினைவூட்டுகின்றன என்றும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.