வவுனியா- பண்டாரிக்குளத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் பசுமாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு மாதங்களில் கன்றை ஈன்றெடுக்கும் நிலையில் காணப்பட்ட பசு மாட்டையே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, மாட்டை வெட்டி இறைச்சியை எடுத்துவிட்டு தலை, எலும்பு, கழிவுகளை சந்தேகநபர்கள் பண்டாரிகுள கட்டு ஓரத்தில் வீசி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பசு மாட்டின் பெறுமதி 250,000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.