சப்ரகமுவ, மத்திய, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (06.04.2025) இரவு 11 மணி வரை நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.