தென் கொரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் லீ ஜே-மியுன் வெற்றி பெற்றுள்ளார்.
61 வயதான லீ, நடந்து முடிந்த தேர்தலில் 49.3 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பழமைவாத மக்கள் சக்தி கட்சியின் தலைவர் கிம் மூன்-சூ 41.3 சதவீத வாக்குகளை வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
இதற்கமைய, தென் கொரியாவின் 14வது ஜனாதிபதியாக லீ ஜே-மியுன் இன்று(04.06.2025) பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், தென் கொரியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முதல் இலக்கு என லீ ஜே-மியுன் தெரிவித்துள்ளார்.




















