சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் சீரியலில் எப்போதுமே பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு இடமுண்டு.
அண்ணன் தம்பிகளின் பாசத்தை காட்டும் குடும்ப பாங்கான கதை பாண்டியன் ஸ்டோர்ஸ்.
கூட்டுக்குடும்பமாக வாழும் அண்ணன் தம்பிகளின் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை, பிரச்சனைகளை அழகாக படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
இத்தொடரில் நடித்து வரும் கதிர்- முல்லை ஜோடிக்காகவே தொடரை பார்ப்பவர்களும் அதிகம் தான்.
அந்தளவுக்கு ரொமான்சில் அசத்தி வருகின்றனர், முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்த பின்னர், காவ்யா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
சித்ராவை ரசித்து வந்த ரசிகர்களுக்கு, காவ்யாவின் நடிப்பு முதலில் ஓரளவு பிடிக்காமல் இருந்தாலும் தற்போது அவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் காவ்யா வெளியிட்ட சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
View this post on Instagram