சூடானில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் 27 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் அதிகம் சாப்பிடக்கூடிய ரொட்டி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை எட்டியது.
இதனால் அந்நாட்டு மக்கள், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்திய கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வந்த
உமர் அல் பஷீரை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தை அரசு ஒடுக்கியது, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் துன்புறுத்தப்பட்டனர்.
அப்படி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகமது அல் காஹிர் என்ற பள்ளி ஆசிரியர் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்புபடையினரால் கொல்லப்பட்டார்.
அவரது இறப்பு போராட்டத்தை மேலும் தீவிரமானதால் கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. உமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது அங்கு இடைக்கால ராணுவ சபை மற்றும் பொதுமக்கள் தரப்பிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆகிய 2 அமைப்புகளும் இணைந்து ஆட்சியை வழிநடத்தி வருகின்றன.
இதையடுத்து அல் காஹிர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்பு படையினர் 27 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், 27 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.