பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரையில் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எட்டாம் திகதி முதல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவின் உயர்மட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும் என இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புது டில்லி தவிர்ந்து வாரணாசி, சாரநாத், போத் கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கை தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது, பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரிப்பது உள்ளிட் விடயங்கள் குறித்து பேசப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.


















