தன்னை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா விடுத்த கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதில்லை எனவும், இது தொடர்பில் பின்னர் ஆராயலாம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
பைசர் முஸ்தபாவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்து கொள்வதை அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.