ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று வடக்கு மாகாணமான அல்-ஜாவ்ஃபில் விபத்துக்குள்ளானது.
ஏமன் இராணுவப் பிரிவுகளுக்கு அருகே சவுதி டொர்னாடோ போர் விமானம் விழுந்ததாக சவுதி கூட்டுப்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு, தாங்கள் தான் விமானத்தை சுட்டுக் வீழ்த்தியாக பொறுப்பேற்றுள்ளனர்.
தரைவழி ஏவுகணைகளைப் பயன்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்களை சவுதி அரேபியா வழங்கவில்லை. மேலும், சனிக்கிழமை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், சில பொதுமக்கள் தற்செயலாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறியது.
சனிக்கிழமையன்று அல்-ஜாஃப் பகுதியில் சவுதி கூட்டுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
சவூதி தலைமையிலான கூட்டுப்படை 2015 முதல் ஏமன் கிளர்ச்சியாளரான ஹவுத்தியை எதிர்த்துப் போராடி வருகிறது குறிப்பிடத்தக்கது.




















